![]() |
| ராகு-கேது |
ராகு-கேது பலன்கள் பெற சில பரிகார பூஜைகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
1. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.
2. பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.
3. கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.
4. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தலாம்.
5. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.
6. பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.
7. ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.
8. அன்னதானம் செய்ய விரும்பவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம்.
9. வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
10. அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம்.





No comments:
Post a Comment