04 October 2010

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்]மகாளய அமாவாசை கோயில்]




முன்னோருக்கு தர்பணம் கொடிக்கும் மிகச்சிறந்த தளங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலுக்கு, வ்ரும் 7ஆம் தேதி நிகழும் மகாளய அமாவாசையை ஒட்டி சென்று வரலாம்.  108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.



ஸ்தல புராணம்:

ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணுடன் போரிட்டார்.  அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தார்.  சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தார்.  தன் மரணத்துக்கு பிறகு தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டி உயிர் விட்டார்.  அதன்படி, ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து  தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார் ராமன்.  இதனால், ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

மேலும் இங்கு தாயார் மரகதவல்லியின் சன்னதி பெருமாளுக்கு இடதுபுறமும், பூதேவியின் அம்சமான ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தால் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார்.  எனவே, இங்குள்ள தீர்த்தம் "ஜடாயு புஷ்கரணி" என அழைக்கப்படுகிறது.

"திரு" என்றால் "மரியாதை" ; "புள்" என்றால் "பறவை " [ஜடாயு] ; "குழி" என்றால்  "ஈமக்கிரியை செய்தல்" .  ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் "திருப்புட்குழி" ஆனது.

சிறப்பம்சம்:

மூலவர் விஜயராகவப்பெருமாள்.  தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.  பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு.  ஈமக்கிரியை செய்த ஸ்தலமானதால், கோயில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளன.  மூலவரின் மேல் உள்ள் விமானம், விஜய வீர கோட்டி விமானம் எனப்படுகிறது.

ஸ்தலப் பெருமை:

இங்குள்ள தாயாருக்கு "வறுத்தபயறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் " என்ற சிறப்பு பெயருண்டு.  இவளை வணங்கினால் பலன் உறுதி என்பதால், இவ்வாறு சொல்வர்.  திருந்தாதவர்களும் இவள் பார்வைபட்டால் திருந்தி விடுவார்களாம்.  அது மட்டுமல்ல......குழ்ந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்ததில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைந்த பயிறை தங்கள் மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும்.  அந்த பயிறு முளைந்திருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஓர் நம்பிக்கை.

ராமானுஜரின் குருவான யாதவப்பிரகாசர் இவ்வூரில் தான் வசித்தார்.  இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை
வாகனம் இருக்கிறது.  சிற்பக்கலையில் இது ஒரு அதிசயம்.  உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை.  இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டார்.  இவரது உறுதிக்கும், பக்கிக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ஆம் நாளன்று அந்த சிற்பியின்
பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.  ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோருக்கு தர்பணம் செய்பவர்கள், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


அன்பர்கள் பெருமாளைச் சேவித்து எல்லா நலன்களையும் பெறுவார்களாக!
மங்களாசாசனம: இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி.
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பொ¢ய திருமொழி
அலங்கெழு தடக்கை அயன்வாய் ஆம்பற்கு
அழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொரு நீர்ப்புட்குழிபாடும்
போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என்நினைந்து இருந்தாய்
இடவெந்தை எந்தைபிரானே!

தலம் : திருப்புட் குழி
விஷ்ணு : விஜயராகவப் பெருமாள்
தாயார் : மரகதவல்லித் தாயார்
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
பாசுரம் : திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களால் இக்கோயிலை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
விமானம்:  விஜயகோடி விமானம்


எப்படிப் போவது:

இத்தலம், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் பாதையில் வடமேற்கில் 10 கி.மீ. தொலைவில் பாலுச்செட்டிச் சத்திரம் என்னும் ஊ¡ரிலிருந்து 1கி.மீ. தொலைவில் உள்ளது.





கோயில் திறக்கும் நேரம்:  

காலை :   7 - 12 மணி; 
மாலை:  4 - இரவு 7 மணி.
தொலைபேசி எண்:  044 - 272 46501

No comments:

Related Posts with Thumbnails